• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரோபோட்சாவ் மூலம் ரோபாட்டிக்ஸ் கல்வியை வகுப்பறைகளுக்கு அப்பால் கொண்டு செல்ல வி ஃபவுண்டேஷன் மற்றும் எரிக்சன் நிறுவனங்கள் கூட்டு

August 6, 2026 தண்டோரா குழு

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு அமைப்பான வி ஃபவுண்டேஷன், எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து, பள்ளிகளுக்கு இடையேயான இளம் மாணவர்களிடையே புத்தாக்கம், படைப்பாற்றல் மற்றும் ஸ்டெம் மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு ரோபாட்டிக்ஸ் தளமான ரோபோட்சாவ் – த ஃபெஸ்டிவல் ஆப் டெக்னாலஜி ஐ அறிவித்துள்ளது.

இந்த முயற்சி குறித்து பேசிய வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் தலைமை ஒழுங்குமுறை மற்றும் கார்ப்பரேட் விவகார அதிகாரியும்,வி ஃபவுண்டேஷன் இயக்குநருமான அம்பிகா குரானா,

“இளைய மாணவர்களுக்கு ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு கற்றலை மேலும் ஈர்க்கக்கூடியதாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுவதன் மூலம் பரந்த ‘டிஜிட்டல் இந்தியா’ இலக்கிற்கு பங்களிக்கும் பல முயற்சிகளில் ரோபோட்சாவ் உம் ஒன்றாகும். ரோபாட்டிக்ஸ் ஆய்வகத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படும் இந்த முயற்சியில், ரோபோட்சாவ் இணையதளம் எங்கள் அறிவுக் கூட்டாளியான மொய்னீ ஃபவுண்டேஷனுடன் இணைந்து தொடங்கப்படுகிறது.

இந்த முயற்சி, மாணவர்களுக்கு ரோபாட்டிக்ஸ், 3டி அச்சிடுதல், நிரலாக்கம், மெய்நிகர் உலகம் மற்றும் படைப்பாற்றல் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் நேரடி அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிகழ்நிலை மற்றும் இணையதள கற்றல் அனுபவங்கள், போட்டிகள் மற்றும் கூட்டுச் செயல்பாடுகள் ஆகியவற்றின் கலவையின் மூலம், ரோபோட்சாவ், மாணவர்களை ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு உலகிற்கு ஈர்க்கும் வகையில் அறிமுகப்படுத்துகிறது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கற்றல் அனுபவங்கள், போட்டிகள் மற்றும் கூட்டுப்பணி நடவடிக்கைகள் ஆகியவற்றின் ஒரு கலவையின் மூலம், ரோபோட்சாவ் மாணவர்களை ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு உலகிற்கு ஈர்க்கக்கூடிய வகையில் அறிமுகப்படுத்துகிறது.ரோபோட்சாவ் இணையதளத்தில், இந்தியா முழுவதுமுள்ள மாணவர்கள் வினாடி-வினா மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகளில் கலந்துகொள்ளலாம், வலைப்பதிவுகள் மற்றும் தொகுக்கப்பட்ட கற்றல் வளங்களை ஆராய்ந்து, ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் குறித்த தங்களின் புரிதலை ஆழப்படுத்திக்கொள்ளலாம்.

திறந்தநிலை டிஜிட்டல் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், மாணவர்கள் தங்கள் வேகத்தில் கற்றுக்கொள்ளவும், ஈடுபடவும், தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உதவுகிறது. மாணவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், சக மாணவர்களுடன் ஒத்துழைக்கவும் கூடுதல் வாய்ப்புகளை வழங்குகின்ற ரோபோட்சவ்வின் கீழான ஆஃப்லைன் போட்டிகள் வரும் மாதங்களில் தொடங்கப்படும் என்றார்.

மேலும் படிக்க