• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாஜ்பாய் இறந்துவிட்டாரா – திரிபுர ஆளுநர் சர்ச்சை டுவீட்

August 16, 2018 தண்டோரா குழு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் தவறாக பதிவிட்ட திரிபுரா ஆளுநர், சற்று நேரத்தில் அப்பதிவை நீக்கி வருத்தம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் உடல்நலகுறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதற்கிடையில்,நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.அதைப்போல் இன்று காலை அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில்,வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த திரிபுரா ஆளுநர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.பின்னர்,சற்று நேரத்தில் அப் பதிவை நீக்கிய திரிபுரா ஆளுநர்,ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்திகளை நம்பி இரங்கல் செய்தி வெளியிட்டதாகவும் தெரிவித்து
உள்ளார்.திரிபுரா ஆளுநரின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க