• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாஜ்பாய்க்கு பகைவர்களே இல்லை என்பது தான் அவருடைய தனிச்சிறப்பு – பா.சிதம்பரம்

August 16, 2018 தண்டோரா குழு

வாஜ்பாய்க்கு பகைவர்களே இல்லை என்பது தான் அவருடைய தனிச்சிறப்பு என முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் இன்று மாலை 5.05 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

இதையடுத்து அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,வாஜ்பாய் மறைவுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் மறைவு குறித்து பா.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் மறைவில் ஒரு கருணை உள்ளம் கொண்ட கண்ணியமான அரசியல் தலைவரை இந்தியா இழந்துவிட்டது.வாஜ்பாய் அவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள் என்பது புதிய செய்தி அல்ல.அவருக்குப் பகைவர்களே இல்லை என்பது தான் அவருடைய தனிச்சிறப்பு” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க