September 8, 2018
தண்டோரா குழு
பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக நினைத்து,அவரது மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ ராம் கதம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.இது பெரும் சர்ச்யை ஏற்படுத்தியதையடுத்து தனது பதிவை ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டார்.
இதனையடுத்து தனது பதிவை உடனடியாக நீக்கிய அவர்,நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.அவரின் ஆரோக்கியமான உடல்நிலையை பெறவும்,விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் என மற்றொரு ட்வீட் போட்டுள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது நடந்த உறியடி விழாவில் இளைஞர்கள் விரும்பும் பெண்களை கடத்தி ஒப்படைப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.