• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு

September 24, 2018 தண்டோரா குழு

அதிமுக எம்.பி. அருண்மொழிதேவன் கொடுத்த புகாரின் பேரில் எச்.ராஜா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடந்த 2ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆலயங்கள் மீட்பு என்ற பெயரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக எம்.பி.அருண்மொழித்தேவன்,திட்டக்குடி குளத்தை ஆக்கிரமித்திருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதனைக்கண்டித்து,ஹெச்.ராஜாவுக்கு எதிராக அதிமுக எம்.பி. அருண்மொழித் தேவன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில்,இப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எச்.ராஜா மீது இரு பிரிவினரிடையே கலகத்தை ஏற்படுத்துவது,பொதுமக்களிடம் தவறான கருத்துக்களை பரப்புவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க