• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை – எச்.ராஜா

September 25, 2018 தண்டோரா குழு

என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இல்லை என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.அப்போது,பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு நீதிமன்றம் குறித்தும் காவல்துறை குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

இதனிடையே,அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இதையடுத்து,கடந்த 17-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளது.மேலும்,4 வாரத்திற்குள் எச்.ராஜா நேரில் ஆஜராகி இது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

இந்நிலையில்,இந்த வழக்கு இன்று நீதிபதி தகில் ரமானி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது எச்.ராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கரிஞர்,எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அவரை நேரில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் சி.டி.செல்வம் அமர்விற்கு அதிகாரம் கிடையாது.இது தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மட்டுமே நேரில் ஆஜராக உத்தரவிட முடியும் என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து,இதற்கு உத்தரவு நகல்களை தாக்கல் செய்தால் ஆய்வு செய்யப்படும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு பதில் அளித்துள்ளது.

மேலும் படிக்க