• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை – எச்.ராஜா

September 25, 2018 தண்டோரா குழு

என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இல்லை என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.அப்போது,பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு நீதிமன்றம் குறித்தும் காவல்துறை குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

இதனிடையே,அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இதையடுத்து,கடந்த 17-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளது.மேலும்,4 வாரத்திற்குள் எச்.ராஜா நேரில் ஆஜராகி இது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

இந்நிலையில்,இந்த வழக்கு இன்று நீதிபதி தகில் ரமானி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது எச்.ராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கரிஞர்,எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அவரை நேரில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் சி.டி.செல்வம் அமர்விற்கு அதிகாரம் கிடையாது.இது தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மட்டுமே நேரில் ஆஜராக உத்தரவிட முடியும் என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து,இதற்கு உத்தரவு நகல்களை தாக்கல் செய்தால் ஆய்வு செய்யப்படும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு பதில் அளித்துள்ளது.

மேலும் படிக்க