August 16, 2018
தண்டோரா குழு
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்,கடந்த 2 மாதங்களுக்கு முன்பு,சிறுநீரக தொற்று நோய் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.
வாஜ்பாய் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கு சென்று,வாஜ்பாயின் உடல் நிலை குறித்து நலம் விசாரித்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்,உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் வாஜ்பாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தார்.பின்னர் பேசிய அவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும்,மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தார்.