• Download mobile app
19 Mar 2026, ThursdayEdition - 3690
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அர்ஜுனா விருது விருது வென்ற சத்யன் ஞானசேகரனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து

September 21, 2018 தண்டோரா குழு

தமிழ்நாட்டைச் சேர்ந்த மேசைப்பந்து விளையாட்டு வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கியதையடுத்து,தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“சர்வதேச அளவில் மேசைப்பந்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்று இந்திய நாட்டிற்கும்,தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள தங்களுக்கு இந்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் மேசைப்பந்து போட்டிகளில் மேன்மேலும் பல வெற்றிகளை குவித்து சாதனை சிகரங்களை தொடர வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க