September 21, 2018
தண்டோரா குழு
தமிழ்நாட்டைச் சேர்ந்த மேசைப்பந்து விளையாட்டு வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கியதையடுத்து,தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
“சர்வதேச அளவில் மேசைப்பந்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்று இந்திய நாட்டிற்கும்,தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள தங்களுக்கு இந்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் மேசைப்பந்து போட்டிகளில் மேன்மேலும் பல வெற்றிகளை குவித்து சாதனை சிகரங்களை தொடர வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.