• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

October 21, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் நடைபெற உள்ள 3 சட்டபேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 2016 ல் நடைபெற்ற சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெற்ற போது, தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் பணப்புகார்கள் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.எம். சீனிவேல் உடல் நலக் குறைவு காரணமாக இறந்துவிட்டார். இதனால், அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்நிலையில், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் ஒரே நாளில், அதாவது நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போது இந்த மூன்று தொகுதிகளுக்கும் திமுக சார்பில் போட்டியிட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தஞ்சையில் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, அரவக்குறிச்சியில் கே.சி. பழனிச்சாமி, திருப்பரங்குன்றத்தில் மருத்துவர் சரவணன் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தஞ்சையில் போட்டியிடும் அஞ்சுகம் பூபதி மற்றும் அரவக்குறிச்சியில் போட்டியிடும் கே.சி. பழனிச்சாமி ஆகியோர் கடந்த முறை சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் ஆவர்.

மேலும் படிக்க