November 29, 2018
தண்டோரா குழு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ள சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் வெண்கல சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16ம் தேதி திறக்கப்படவுள்ளது.இதற்காக அகில இந்தியா முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிலையில்,அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் சோனியா பங்கேற்க உள்ளார்.
டிசம்பர் 16ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று,விழாவில் பங்கேற்க வருவதாக ஒப்புதல் அளித்து சோனியா காந்தி,மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்த தகவலை திமுக இன்று வெளியிட்டுள்ளது.