• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மது அருந்தி விட்டு பணிக்கு வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து

November 12, 2018 தண்டோரா குழு

பணியின்போது மது அருந்திவிட்டு விமானத்தை இயக்க வந்த மூத்த விமானியின் உரிமத்தை 3 வருடத்துக்கு ரத்து செய்து ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

டெல்லியில் இருந்து லண்டன் நகருக்கு புறப்பட ஏர் இந்தியா விமானம் தயாராக இருந்தது.விமானத்தை இயக்க மூத்த விமானி அரவிந்த் கத்பாலியா வந்தார். அவருக்கு மதுபோதை பரிசோதனை செய்யப்பட்ட போது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியது தெரிய வந்துள்ளது.

முதல் பரிசோதனையடுத்து இரண்டாம் பரிசோதனை செயப்பட்டதில் அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து அவர் விமானத்தை இயக்க தடை விதிக்கப்பட்டு அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.அவர் பணிக்கு மது அருந்தி வந்தது இது இரண்டாவது முறையாகும் எனவே ஏர் இந்தியா நிறுவனம் அவரது உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு ரத்து செய்துள்ளது.இதனால் டெல்லியில் இருந்து லண்டனுக்குப் பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் தாமதமாகவே புறப்பட்டது.

மேலும் படிக்க