• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் மீது உடனடியாக வழக்கு தொடர அமைச்சர் தங்கமணி தயாரா?– மு.க.ஸ்டாலின்

September 21, 2018 தண்டோரா குழு

என் மீது உடனடியாக வழக்குத் தொடர அமைச்சர் தங்கமணி தயாரா?ஓரு வாரத்தில் வழக்கு தொடராவிட்டால்,நான் அவர் மீது வழக்கு தொடர்வேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் காற்றாலை மூலமாக தயாரிக்கப்படும் மின்சாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.இதற்கு அமைச்சர் தங்கமணி,”எதிர்கட்சித் தலைவர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் என்மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்.தொடர்ந்து இவ்வாறு கூறி வந்தால் அவர் மீது வழக்கு தொடர்வேன்” என கூறியிருந்தார்.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,

“காற்றாலை மின்சார ஊழல் தொடர்பாக நான் வெளியிட்ட நீண்ட அறிக்கைக்கு அமைச்சர் தங்கமணி இதுவரை பதிலளிக்கவில்லை.என்னிடம் ஆதாரம் இல்லை என்று கூறுகிறார்.ஆதாரம் என்னிடம் இருப்பதாலேயே நான் பேசுகிறேன்.அந்த ஆதாரம் தொடர்பாக விசாரிக்கும்படி நான் கூறி அதனை வெளியிட்டுளேன்.அமைச்சர் தங்கமணி குறித்து அவதூறாக பேசியதற்காக என் மீது வழக்கு தொடர போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.ஆனால் இதுவரை வழக்கு தொடரவில்லை.நான் கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய் என்றால் அமைச்சர் தங்கமணி ஒரு வாரத்திற்குள் என் மீது வழக்கு தொடர வேண்டும்,இல்லையென்றால் நான் அவர் மீது வழக்கு தொடர்வேன்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க