• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

September 11, 2018 தண்டோரா குழு

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்,நிரூபிக்க முடியாவிட்டால் பதவிகளை விட்டு ஒதுங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயாரா? என உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

வரலாறு கண்டிராத மெகா ஊழலில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை விசாரணை நியாயமாக நடைபெற உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 2017-18ம் நிதியாண்டில் 100 வேலைவாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு டெல்லியில் தேசிய விருது வழங்கபட்டது.மத்திய அரசின் தேசிய விருதுகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,

“உள்ளாட்சி துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசு 6 விருதுகளை தமிழகத்துக்கு தந்துள்ளது.என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்,நிரூபிக்க முடியாவிட்டால் பதவிகளை விட்டு ஒதுங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக அரசை கவிழ்க்க திமுக எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து வருகின்றன.முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவரின் மீதும் திமுக குற்றஞ்சாட்டி வருகிறது.” இவ்வாறுக் கூறினார்.

மேலும் படிக்க