• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லஞ்ச ஆட்சி என தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன் – அமைச்சர் துரைகண்ணு

September 26, 2018 தண்டோரா குழு

அதிமுக ஆட்சியை லஞ்ச ஆட்சி என தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன் என அமைச்சர் துரைகண்ணு பேசியுள்ளார்.

ஆளும் அதிமுக கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.அந்த வகையில் தஞ்சையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும்,வேளாண்துறை அமைச்சருமான துரைக்கண்ணு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“மக்களுக்கு வழங்கப்பட்ட கோதுமையில் ஊழல்,விவசாயத்திற்காக பூச்சி மருந்து வழங்கியதில் ஊழல்,மின்சாரம்,நிலக்கரி பேரத்தில் ஊழல் என அனைத்திலும் ஊழல் செய்தவர்கள் தி.மு.க.வினர்.லஞ்சத்தில் திளைத்தவர்கள் தி.மு.க.வினர்.ஊழலை கண்டு பிடித்தவர்கள் தி.மு.க.வினர் தான்.இதனை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.இந்த ஆட்சி இன்றைக்கு கவிழ்ந்து விடும்,நாளைக்கு கவிழ்ந்து விடும் என்று தினமும் குடுகுடுப்பைக்காரன் போல் சிலர் பேசி வருகிறார்கள்.தமிழக அரசு வறட்சியிலும் வளர்ச்சி கண்டு வருகிறது.தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடக்கிறது.வேளாண்மைத்துறை,உள்ளாட்சித்துறை என அனைத்திலும் வளர்ச்சி.தமிழகத்தில் எடப்பாடி,ஓ.பி.எஸ்., தஞ்சை மண்ணின் மைந்தன் வைத்திலிங்கம் இருக்கும் வரை இந்த ஆட்சியை,கட்சியை எவராலும் அசைக்க முடியாது.இந்த ஆட்சியை லஞ்ச ஆட்சி என தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன்”.இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க