• Download mobile app
10 Jul 2025, ThursdayEdition - 3438
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

விமர்சனத்துக்குள்ளான ஜெயலலிதாவின் பழைய சிலைக்கு பதில் புதிய சிலை!

October 23, 2018 தண்டோரா குழு

அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட விமர்சனத்துக்குள்ளான ஜெயலலிதாவின் பழைய சிலை அகற்றப்பட்டு அங்கு விரைவில் அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவிற்கு கடந்த பிப்ரவரி 24 அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் 7 அடி உயர முழு உருவச்சிலை திறக்கப்பட்டது.ஆனால்,அந்த சிலை ஜெயலலிதாவின் கம்பீரம்,அவரது உருவம் எதுவும் இல்லை என விமர்சனம் வைக்கப்பட்டது.சமூக வலைத்தளங்களிலும் சிலை குறித்து விமர்சனங்கள் எழுந்தது.இதனால்,அமைச்சர்கள் வேறு சிலை விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து,ஆந்திராவிலிருக்கும் ரமேஷ் என்கிற சிற்பி தலைமையிலான குழுவிடம் ஜெயலலிதாவின் சிலை தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.இம்முறை செய்யப்படும் சிலை ஜெயலலிதா போன்று தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.இதனால் கடந்த 8 மாதங்களாக சிலை செய்யும் பணி தீவிரமாகவும் கவனமாகவும் நடந்தது.

இந்நிலையில் தற்போது சிலை முழுமையாக தத்ரூபமாகத் தயாராகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது உருவாகியுள்ள ஜெயலலிதாவின் சிலை மாதிரி வெளியாகி உள்ளது.அதில் ஜெயலலிதாவின் உருவம் சிரித்த முகத்துடன் வலது கையை உயர்த்தி இரட்டை விரலைக் காட்டும் வகையில் தத்ரூபமாக அமைந்துள்ளது.இதனால்,விரைவில் தற்போதுள்ள சிலை அகற்றப்பட்டு அங்கு புது சிலை வைக்கப்படும் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க