• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு

September 26, 2018 தண்டோரா குழு

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை ட்விட்டரில் விமர்சித்ததற்காக பிரபல நடிகையும்,காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரபேல் போர் விமான விவகாரம் நாட்டில் பெரும் விவாதமாக கிளம்பியுள்ளது.காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.இதற்கிடையில்,காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளராக உள்ள நடிகை ரம்யா,டுவிட்டரில் ரபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்துள்ளதுடன்,அவரது புகைப்படத்தையும் கேலி செய்யும் வகையில் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து,ரம்யாவின் டுவிட்டர் பதிவு,பிரதமர் மோடியை குறிவைத்து அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் சையது ரிஸ்வான்,கோமித்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் நடிகை ரம்யா மீது உத்தரப்பிரதேச போலீசார் தேசதுரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க