• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்ச்சையில் சிக்கி பதவியை பறிகொடுத்த ஆம் ஆத்மி அமைச்சர்கள்

September 1, 2016 தண்டோரா குழு

இந்திய தலைநகர் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார்.அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் அமைச்சர்களால் கெஜ்ரிவாலுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

முதன்முறையாகச் சட்டப்படிப்பு படித்ததாகப் போலி சான்றிதழ் சமர்ப்பித்த வழக்கில் டெல்லி மாநில சட்ட அமைச்சராக ஜிதேந்தர் தோமர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.அதைத் தொடர்ந்து அவரது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் ஆம்ஆத்மி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் ஆஷிம்கான். இவர் உணவுத்துறையில் கான்ட்ராக்ட் விட்டதில் சிலருடன் பேரம் பேசியதாக புகார் எழுந்தது.இது குறித்து எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டு மற்றும் ஒரு மணி நேரம் ஓடும் ஆடியோ டேப் ஒன்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கவனத்துக்கு வந்தது.

இந்தத் தகவல் வெளியே பரவும் முன்னதாக தாமே முன்வந்து அமைச்சரை நீக்குவதாகப் பத்திரிகையாளர்களிடம் அறிவித்தார் கெஜ்ரிவால்.

அதேபோல் மற்றொரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.டெல்லி அமைச்சரவையில் சமூக நலம்,பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் சந்தீப்குமார்(36).இவர் தொடர்பான சி.டி. ஒன்று முதல்வரின் பார்வைக்கு சென்றுள்ளது.

அதில் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற காணொளி மற்றும் புகைப்படங்கள் இருந்தது. இதையடுத்து அவரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேர்தலுக்காக டெல்லி முதல்வர் தேர்ந்தெடுத்த வேட்பாளர்களின் நடவடிக்கைகளைக் குறித்து கெஜ்ரிவாலுக்கு முன்பே எச்சரிக்கை செய்ததாக அக்கட்சியின் முன்னால் மந்திரிகள் யோகேந்திர யாதவ் மற்றும் பிரஷாந்த் புஷன் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க