• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! 55 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

February 5, 2019 தண்டோரா குழு

சென்னையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தேவராஜ் என்பவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அடுத்த பட்டினம்பக்கம் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வருபவர் அலெக்ஸ் (எ) தேவராஜ் (55). இவர் அதே பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் தாய் மற்றும் தந்தையை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இச்சம்பவம் நடந்து 20 நாட்கள் கழிந்த நிலையில் சிறுமிக்கு மீண்டும் தேவராஜ் பாலியல் தொந்தரவு கொடுக்க, இதனை சிறுமி தனது மூத்த சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சகோதரி பெற்றோரிடம் கூற அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பட்டினம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் தேவராஜை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க