• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

9 ஆண்டுகளுக்கு முன்பு ஆபாச குறுச்செய்தி அனுப்பிய ஆசிரியர் தற்போது போக்ஸோ சட்டத்தில் கைது

October 29, 2020 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூரைச்சேர்ந்த 19 வயது மாணவி அங்குள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் கோவை இராமநாதபுரத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்.

அதில் அம்மாணவி 8 மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும்போது, திறன் மேம்பாடு மற்றும் ஆங்கில புலமை கற்றுத்தர ஜெய்சங்கர் (39) என்ற ஆசிரியர் பாடம் நடத்தியுள்ளார். மாணவிகளின் எண்களை வாங்கியவர், அவர்களது செல்போன் எண்னுக்கு திறன் மேம்பாடு மற்றும் ஆங்கில புலமை குறித்த தகவல்களை அனுப்பியுள்ளார். இதனையடுத்து ஆபாச தகவல்கள் மற்றும் புகைப்படங்களை மாணவிக்கு அனுப்பியுள்ளார். உடனே அவரது எண்ணை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து கடும் மன உளைச்சலில் இருந்த மாணவி யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தற்போது போஸ்கோ சட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிந்து, 9 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த பிரச்சனைகள் குறித்து இராம்நாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து காவல் துறையினர் சாமுவேல் ஜெய்சங்கரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.9 ஆண்டுகளுக்கு முன்பு ஆபாச குறுச்செய்தி மற்றும் புகைப்படம் அனுப்பிய ஆசியர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க