• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில செயல் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் நியமனம் !

November 30, 2018 தண்டோரா குழு

காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில செயல் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானாவில் டிசம்பர் 7ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.மாநிலத்தில் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.இதையடுத்து,வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பணியாற்றி வரும் காங்கிரஸ் கட்சி,தற்போது அம்மாநிலத்திற்கான நிர்வாகிகளை அறிவித்துள்ளது.அந்தப் பட்டியலில் முகமது அசாருதீனுக்கு செயல் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அசாருதீன்,2009 லோக்சபா தேர்தலில் உ.பி.,யில் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.2014 தேர்தலில்,ராஜஸ்தானின் டோங்க்-சவாய் மாதோபூர் தொகுதியில் தோல்வியடைந்தார்.அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் அவர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க