• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போபாலில் தப்பிச் சென்ற 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

October 31, 2016 தண்டோரா குழு

போபால் சிறையிலிருந்து திங்கள்கிழமை (அக். 31) அதிகாலையில் தப்பியோடிய “சிமி” தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 8 தீவிரவாதிகள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபால் மத்திய சிறையில் சிமி இயக்கத்தை சார்ந்த 8 தீவிரவாதிகள் அதிகாலையில் சிறைக் காவலரின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தி சுவர் மீது ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து, தப்பியோடிய தீவிரவாதிகளைப் பிடிக்க தேடல் வேட்டை நடைபெற்றது.

இதையடுத்து, போபால் புறநகர் பகுதியான இந்த்கேடி என்னும் கிராமத்தில் தப்பிச் சென்ற தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த காவல்துறையினர் பதுங்கியிருந்த 8 சிமி தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் சென்னை குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட ஜாகீர்உசேன், மெகபூப் ஆகியோரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க