• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க எதிர்ப்பு – கோவையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

May 19, 2020 தண்டோரா குழு

எட்டு மணி நேர வேலை நேரத்தை பன்னிரண்டு மணி நேரமாக அதிகரிக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எட்டு மணி நேர வேலை நேரத்தை பனிரெண்டு மணி நேரமாக அதிகரிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது முக கவசம் அணிந்தபடி, மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

மேலும்,எட்டு மணி நேர வேலை நேரத்தை அதிகரிக்க கூடாது எனவும், வேலை நேரத்தை பனிரெண்டு மணி நேரமாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்திய தொழிற்சங்கத்தினர், வருகின்ற 22 ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுமென தெரிவித்தனர்.

மேலும் படிக்க