• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

8 அடி நீளமுள்ள பாம்பை சர்வ சாதரணமாக கையில் பிடித்த நபர் – வைரலாகும் வீடியோ

August 1, 2020 தண்டோரா குழு

கோவை செங்காளிபாளையம் பகுதியில் 8 அடி நீளமுள்ள பாம்பை சர்வ சாதரணமாக கையில் பிடித்து தரதரவென இழுத்து வந்த நபரை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். பாம்பை பிடித்து வரும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

கோவை துடியலூரை அடுத்த செங்காளிபாளையம் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் ஒருவீட்டின் அருகே பெரிய பாம்பு ஒன்று இருப்பதாக தகவல் பரவியது.
இதை கேள்விப்பட்டு அங்கு அப்பகுதி மக்கள் அங்கு குவிந்துவிட்டனர். அதற்குள் அந்த பாம்பு அருகில் இருட்டாக இருந்த ஒரு புதருக்குள் சென்றுவிட்டது.அப்போது கூட்டத்தில் இருந்த குமார் என்பவர் கையில் ஒரு டார்ச் லைட்டுடன் அந்த புதருக்குள் சென்றார். சிறுது நேரம் கழித்து வெளியே வந்த அவர் கையில் சுமார் 8 அடி நீளமுள்ள பாம்பு இருந்ததைப் பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சரியமடைந்து கூச்சலிட்டனர்.

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என பழமொழி உள்ள நிலையில் பாம்பை சர்வசாதரணமாக கையில் பிடித்து தரதரவென இழுத்து வந்த குமாரோ ஏதோ கையில் புடங்காயை பிடித்திருப்பது போல பிடித்திருந்தார். இதனை அங்கிருந்தவர்கள் தங்கள் மொபைல் போன்களில் வீடியே எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க