• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரண்டு மாதத்திற்கு பின் செயல்பட துவங்கிய கோவை நேரு விளையாட்டு அரங்கம்

June 2, 2020 தண்டோரா குழு

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட நேரு உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கத்தில் இரண்டு மாதத்திற்கு பின் வீரர், வீராங்கனைகள் தங்கள் விளையாட்டு பயிற்சிகளை மீண்டும் துவங்கினர்.

உலகையே அச்சுறுத்திய கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் வெளியே வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் கோவையின் முக்கிய விளையாட்டு பயிற்சி மையமான நேரு விளையாட்டு அரங்கம் மூடப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டு வெரிச்சோடியே காணப்பட்டது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டதால் இரண்டு மாதங்களுக்கு பின் நேரு உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கங்கள் மீண்டும் செயல்படத்துவங்கியது.

அதிகாலையிலேயே வந்த வீரர், வீராங்கனைகள் தங்கள் வழங்கமான பயிற்சிகளை நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் துவங்கினர். குறிப்பாக கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து பயிற்சி, அதே போல் குத்துச்சண்டை, போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து மாணவர்கள் கூறும்போது,

இரண்டு மாதங்கள் போதிய பயிற்சி இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தோம் தற்போது மாநகராட்சியில் நேரு விளையாட்டு அரங்கம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதால் மீண்டும் பயிற்சியை துவங்கியது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தனர்.

இரண்டும் மாதங்களுக்கு பின் நேரு விளையாட்டு அரங்கில் வீரர், வீராங்கனைகள் பயிற்சிகளை செய்து வருவதன் மூலம், வெரிச்சோடி காணப்பட்ட கோவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.

மேலும் படிக்க