• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

60 வருடங்களுக்கு முன்பு திருட்டுப்போன தஞ்சை பெரிய கோயில் சிலைகள் மீட்பு!

May 30, 2018 தண்டோரா குழு

சுமார் 60 வருடங்களுக்கு முன்பு திருட்டுப்போன ரூ.150 கோடி மதிப்பிலான ராஜராஜசோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் குஜராத்தில் மீட்கப்பட்டது.

தமிழகத்தின் தஞ்சை பெரிய கோவிலில் சோழ மன்னன் ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் இருந்தன.கடந்த 60 வருடங்களுக்கு முன்பு இந்த சிலைகள் திருட்டு போயின.இதன் மதிப்பு ரூ.150 கோடி இருக்கும் என திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

இதற்கிடையில்,சிலை திருடு பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில்,ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் குஜராத்தில் மீட்கப்பட்டு உள்ளது. வழக்கு பதியப்பட்ட 90 நாட்களில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

கொள்ளையர்கள்,போலி சிலைகளை வைத்துவிட்டு 2 சிலைகளையும் திருடி சென்றுள்ளனர். மீட்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் சிலைகள் ரயில் மூலம் நாளை சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க