• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

February 2, 2017 தண்டோரா குழு

புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் படகு ஒன்றையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் தங்களுக்கு சொந்தமான படகு ஒன்றில் மீன் பிடிக்கச் கடலுக்கு புதன்கிழமை இரவு சென்றுள்ளனர். இந்திய இலங்கை எல்லை அருகே உள்ள நெடுந்தீவு பகுதியில் மீனவர்கள் 5 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

நெடுந்தீவு அருகே வியாழக்கிழமை அதிகாலை இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அப்போது அங்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். படகு ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் மீது எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.

அதன் பின் அவர்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அவர்கள் விசாரணைக்கு பின் அபராதம் விதித்து விடுவிக்கப்படுவார்களா அல்லது இலங்கை சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது தெரியவில்லை.

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படாத நிலையில், மேலும் 5 மீனவர்களை தற்போது சிறைபிடித்திருப்பது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க