• Download mobile app
07 Dec 2025, SundayEdition - 3588
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

5 குட்டிகளுடன் வந்த 12 யானைகள் : ஆழ்துளை கிணறு, விவசாய நிலங்களை சேதப்படுத்தியது

January 21, 2023 தண்டோரா குழு

கோவை பேரூர் அருகே 5 குட்டிகளுடன் வந்த 12 யானைகள்,ஆழ்துளை கிணறு, விவசாய நிலங்களை சேதப்படுத்தியது.

கோவை பேரூர் அருகே தீத்திபாளையம் கிராமம் அய்யாசாமி கோயில் செல்லும் வழியில் தனி நபருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.இன்று அதிகாலை 4 மணி அளவில் 5 குட்டிகள் உட்பட 12 யானைகள் அங்கு வந்தன.அப்பகுதியில் ஏக்கர் கணக்கில் தீவனப் பிள்ளை மேய்ந்து விட்டு அதன் பின்பு அருகில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்து இரண்டு ஆழ்துளை கிணறுகளிலுள்ள உபகரணங்களை முழுவதையும் உடைத்து சேதப்படுத்தி விட்டது.

மேலும் அத்தோட்டத்தில் தக்காளி செடிக்கு செல்வதற்காக போடப்பட்டிருந்த சொட்டுநீர் பாசன உபகரணங்களை உடைத்து சேதப்படுத்தி விட்டது. பின்னர் வனப்பகுதிக்கு யானை கூட்டம் சென்றுவிட்டது.யானைகளால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க