• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கட்டப்பஞ்சாயத்து செய்வதாக டி.எஸ்.பி மீது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

October 22, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் நிலத்தகராறில்,டி.எஸ்.பி கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும்,சம்மந்தப்பட்ட நில உரிமையாளரை காணவில்லை எனவும்,அவரை கண்டுபிடித்து தரக் கோரியும்,டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கரவழி மாதபூரை சேர்ந்த சென்னியப்பன் என்பவருக்கு,அந்த பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருடன் நிலப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.இந்நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக கருமத்தம்பட்டி டி.எஸ்.பி பாஸ்கரன் தொடர்ந்து கட்டப் பஞ்சாயத்து செய்து சென்னியப்பனை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று டி.எஸ்.பி அலுவலகத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கூறி சென்னியப்பனை அழைத்து சென்றதாகவும்,ஆனால் இதுவரை வீடு திரும்பாததால் அவரை காண்டுபிடித்து தரக் கூறி,சென்னியப்பனின் உறவினர்கள் கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் புகார் மனு அளித்தனர்.மேலும் நிலத் தகராறில் டி.எஸ்.பி பாஸ்கரன் தொடர்ந்து கட்டப் பாஞ்சாயத்து செய்து மிரட்டி வருவதாகவும்,எனவே அவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க