• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும் – ரிசர்வ் வங்கி

August 19, 2017 தண்டோரா குழு

புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பணமதிப்பு இழப்பு விவகாரத்தில், ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளிவர இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதுபற்றி ரிசர்வ் வங்கி எதுவும் கருத்துத் தெரிவிக்காமல் இருந்து வந்தது.

இதுதொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில் புதிய 50 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும்.புதிதாக வெளிவரும் 50 ரூபாய் நோட்டில் சிறப்பம்சமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஹம்பி கோவில் தேரின் படம் இடம்பெறும்.மேலும் ஸ்வச் பாரத் இந்தியாவின் லோகா ஒருபுறம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் பாரம்பரிய பெருமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.மேலும்,பழைய 50 ரூபாய் தொடர்ந்து செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க