• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

252 கியூப்களில் தேசிய கொடி வரைந்து 8 வயது குழந்தை அசத்தல்

August 14, 2022 தண்டோரா குழு

75வது சுதந்திரத்தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவை துடியலூர் அருகே 252 கியூப்களில்தேசிய கொடி வரைந்து 8 வயது குழந்தை அசத்தியுள்ளார்.

கோவை துடியலூர் அருகே அர்ச்சனா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ஹன்சிதா (வயது 8). இவர் கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை குருமூர்த்தி தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். தாய் சுபாஷினி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.75வது சுதந்திரத்தின கொண்டாடப்படுவதை அடுத்து ஹன்சிதா தேசிய கொடியை கியூப்களில் வரைந்து அசத்தியுள்ளார்.

இதுகுறித்து சிறுமி ஹன்சிதா கூறுகையில்,

சிறு வயதில் இருந்தே கியூப் விளையாட்டில் ஆர்வம் அதிகம். அதை வைத்து கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் உருவம் வரைந்தேன். அதே போல் கியூப்களில் நிறைய வரைந்துள்ளேன். தேசிய கொடி வரைய வேண்டும் என ஆர்வம் இருந்தது. 252 கியூப்களில் வரைந்துள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

இவரது திறமையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

மேலும் படிக்க