• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

25 ஆயிரம் செலவில் திருமணம் -அசத்தும் கோவை இளைஞர் !

July 31, 2020 தண்டோரா குழு

கோவையில் ஆஹா செம கல்யாணம் என இலவச முக கவசங்களை வழங்கி அரசு விதிமுறைகளுடன் இருபத்தைந்தாயிரம் செலவில் திருமணங்களை நடத்தி அனைவரையும் வியக்க வைத்து வரும் இளைஞர்.

கோவையைசேர்ந்தவர் ஆனந்த்குமார். பல்வேறு விதமான தனியார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ஈவென்ட்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.பல்வேறு தொழில் துறையினர் தற்போதைய காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வரும் நிலையில் தற்போதைய கொரோனா கால ஊரடங்கு தமக்கு சாதகமாக இவர் பயன்படுத்தி செலவு குறைவாக திருமண நிகழ்ச்சிகளை நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

தற்போதைய காலகட்டத்தில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த நடுத்தர மக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பெறும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் செலவுகளை குறைத்து வெறும் இருபத்தைந்தாயிரம் ரூபாய் செலவில் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் முக கவசங்களை வழங்கி அரசு விதிமுறைகளுடன் திருமணங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இவரது இந்த நூதன முயற்சி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

மேலும் படிக்க