தேமுதிக.,வின் பொருளாளராக விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா தேர்வு செய்யபட்டுள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சி தொடங்கியது முதல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தாலும் கட்சியில் எந்த பொறுப்பும் வகிக்காமல் இருந்து வந்தார்.இதற்கிடையில் விஜயகாந்தின் தற்போதைய உடல் நிலையை கருத்தில் கொண்டு பிரேமலாதா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
“எதிர்பாராத வகையில்,பொருளாளராக என்னை விஜயகாந்த் அறிவித்துவிட்டார்.தீபாவளி போனஸ்போல் எனக்கு பொருளாளர் பதவி கொடுத்துள்ளதாக தொண்டர்கள் கூறினர் கட்சியின் பொருளாளர் பதவியை விஜயகாந்த் எனக்கு கொடுத்தார் இந்த பதவி எனக்கு கொடுக்கப்போகிறார் என்பது என்னை உட்பட யாருக்குமே தெரியாது.என்னை வாழ்த்திய கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.விஜயகாந்திடம் இருந்து பாராட்டு,பதவியை பெறுவது எளிதல்ல.
உண்மை,உழைப்பு இருந்தால் தான் தேமுதிகவில் வளர்ச்சி இருக்கும்.வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும்.இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்.எந்த மதத்தின் நம்பிக்கையையும் மதிக்க வேண்டும்.மதத்தின் பேரலேயே இங்கு மக்கள் பிளவுப்படுத்தப்படுகிறார்கள்.
குடும்ப உறுப்பினர்கள் கட்சிக்கு வருவதை அந்த கட்சியின் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற வேண்டும்.நல்ல ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். உள்ளாட்சி,இடைத்தேர்தல் அறிவிக்க முடியாத நிலையில் ஆளுங்கட்சி உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா ஆட்சியே சரியாக இல்லாத போது சட்ட மன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஆட்சி மட்டும் எப்படி நல்ல ஆட்சியாக இருக்கும்.இனி வரும் காலங்களில் தேமுதிக தொடர்ச்சியாக கட்சி பணியாற்றும்”.இவ்வாறு கூறினார்.
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் ஈரோட்டில் தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை