• Download mobile app
12 Jul 2025, SaturdayEdition - 3440
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தே.மு.தி.க-வின் பொருளாளராக நியமிக்கப்பட்டார் பிரேமலதா விஜயகாந்த் !

October 19, 2018 தண்டோரா குழு

தேமுதிக.,வின் பொருளாளராக விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா தேர்வு செய்யபட்டுள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சி தொடங்கியது முதல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தாலும் கட்சியில் எந்த பொறுப்பும் வகிக்காமல் இருந்து வந்தார்.இதற்கிடையில் விஜயகாந்தின் தற்போதைய உடல் நிலையை கருத்தில் கொண்டு பிரேமலாதா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,

“எதிர்பாராத வகையில்,பொருளாளராக என்னை விஜயகாந்த் அறிவித்துவிட்டார்.தீபாவளி போனஸ்போல் எனக்கு பொருளாளர் பதவி கொடுத்துள்ளதாக தொண்டர்கள் கூறினர் கட்சியின் பொருளாளர் பதவியை விஜயகாந்த் எனக்கு கொடுத்தார் இந்த பதவி எனக்கு கொடுக்கப்போகிறார் என்பது என்னை உட்பட யாருக்குமே தெரியாது.என்னை வாழ்த்திய கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.விஜயகாந்திடம் இருந்து பாராட்டு,பதவியை பெறுவது எளிதல்ல.

உண்மை,உழைப்பு இருந்தால் தான் தேமுதிகவில் வளர்ச்சி இருக்கும்.வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும்.இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்.எந்த மதத்தின் நம்பிக்கையையும் மதிக்க வேண்டும்.மதத்தின் பேரலேயே இங்கு மக்கள் பிளவுப்படுத்தப்படுகிறார்கள்.

குடும்ப உறுப்பினர்கள் கட்சிக்கு வருவதை அந்த கட்சியின் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற வேண்டும்.நல்ல ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். உள்ளாட்சி,இடைத்தேர்தல் அறிவிக்க முடியாத நிலையில் ஆளுங்கட்சி உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா ஆட்சியே சரியாக இல்லாத போது சட்ட மன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஆட்சி மட்டும் எப்படி நல்ல ஆட்சியாக இருக்கும்.இனி வரும் காலங்களில் தேமுதிக தொடர்ச்சியாக கட்சி பணியாற்றும்”.இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க