• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

22 ஆண்டுகள் திமுக ஆட்சியில் தீர்க்காத பிரச்சனையை 100 நாட்களில் தீர்க்க முடியாது – சீமான் பேட்டி

January 27, 2021 தண்டோரா குழு

22 ஆண்டுகள் திமுக ஆட்சியில் தீர்க்காத பிரச்சனையை 100 நாட்களில் தீர்க்க முடியாது – சீமான் பேட்டி

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டல வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. 117 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் எனத் தெரிவித்தார். இந்திய மற்றும் திராவிட கட்சிகளை நாம் தமிழர் கட்சி வழிநடத்துகிறது, சுற்றுச்சூழல் பாசறையை முதன் முதலில் நாம் தமிழர் தான் துவங்கியது.

வேல் எடுத்து முப்பாட்டன் முருகன் என்ற போது, என்னை கேலி, கிண்டல் செய்தனர். இவற்றை நான் ஆத்மார்த்தமாக செய்கிறேன். அவர்கள் ஓட்டுக்காக செய்கிறார்கள். தமிழக மீனவர்கள் படுகொலைக்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். 22 ஆண்டுகள் திமுக ஆட்சியில் தீர்க்காத பிரச்சனையை 100 நாட்களில் தீர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் திமுக தான் மக்களுக்கு பிரச்சனை எனவும், திமுக தோற்றாலே மக்களுக்கு பிரச்சனையில்லை எனவும் அவர் கூறினார். எங்கள் ஆட்சியில் ஒரு மீனவரை கூட தொட முடியாது. மீறி தொட்டால் பதவி விலகி விடுவேன் எனவும், ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர்கையெழுத்திட்டு விடுதலையை சாத்தியப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ஜெயலலிதா நினைவிடம் திறப்பு குறித்த கேள்விக்கு புகழ்பெற்ற மெரினா கடற்கரையை திராவிட கட்சிகள் இடுகாடாகவும், சுடுகாடாகவும் மாற்றிக் கொண்டுள்ளனர் என விமர்சித்தார். எனக்கு ஓட்டு போட்டாலும், போடவில்லை என்றாலும் கவலைப்பட மாட்டேன் எனவும், என்னை தோற்கடிப்பதால் தோற்பது நீங்க தான். ஜெயிக்கும் கட்சிக்கு ஓட்டுப் போட்டால் நீங்கள் தோற்றுப்போவீர்கள் எனவும் சீமான் தெரிவித்தார்.

மேலும் படிக்க