• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

21 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் : ரூ.11 ஆயிரம் அபராதம் வசூல்

December 22, 2022 தண்டோரா குழு

கோவை ராஜவீதியில் 21 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.11 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களிலும்,தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனையைத் தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இதில், பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை மற்றும் தயாரிப்பு உறுதி செய்யப்பட்டால், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில், மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் தனபால் தலைமையிலான மாநகராட்சி அலுவலர்கள் கோவை 81ஆவது வார்டு, ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேக்கரி, சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட 42 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.இதில், 21 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து கடை உரிமையாளர்களிடம் ரூ.11 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் படிக்க