• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2019- 2020-ம் ஆண்டிற்கான பொதுபட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் !

July 5, 2019 தண்டோரா குழு

2019- 2020-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1970ல் கூடுதல் பொறுப்பாக நிதித்துறையை கவனித்துள்ளார். அப்போது அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஆனால், தனி பொறுப்பாக நிதியமைச்சராக பெண் ஒருவர் பொறுப்பேற்று, பட்ஜெட் தாக்கல் செய்வது இதுவே முதல் முறை.

2019- 2020-ம் பொதுபட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன என்ன ?

உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிப்பு

2014-ல் ஆட்சியமைக்கும் போது 1.55 லட்சம் கோடி டாலராக இருந்த பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்வு

மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவின் சொத்தை அதிகரிக்கிறது

இந்திய பொருளாதாரம் உலகின் 3-வது பொருளாதாரமாக விளங்குகிறது

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன

2-வது கட்ட பாரத் மாலா திட்டத்தில் மாநில அளவிலான சாலைகள் அமைக்கப்படும்

ஆறுகளை சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்த திட்டங்கள் வகுக்கப்படும்

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு புதிய சீர்திருத்தம் கொண்டுவரப்படும்

மலிவு விலை வீடுகள் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும்

2030-ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

நாடு முழுவதும் சம அளவில் மின்சார விநியோகம் மேற்கொள்ள ஒரே நாடு ஒரே மின்சார திட்டம செயல்படுத்தப்படும்

ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு குறைவாக வர்த்தம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.350 கோடி பட்ஜெட்டில் ஒக்கீடு

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு 2% வட்டி மானியம் தரப்படும்

ஆண்டுதோறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டம்

ரயில்வே துறையின் முதலீட்டு திட்டங்களுக்கு ரூ.50 லட்சம் கோடி தேவை

ரயில்வேயில் புதிய முதலீடுகளை செய்ய தனியார் பங்களிப்பை பயன்படுத்திக் கொள்ளப்படும்

தேசிய அளவிலான மின் தொகுப்பை போல எரிவாயு தொகுப்பு, தண்ணீர் தொகுப்பு உருவாக்கப்படும்

சமூகநல திட்டங்களுக்காக பணியாற்றும் நிறுவனங்களும் சந்தையில் பட்டியலிடப்படும்

காப்பீட்டு இடைநிலை நிறுவனங்களில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி

ஒரு பிராண்டு பொருள் விற்பனை நிறுவனங்களுக்கான விதிமுறை தளர்த்தப்படும்

2022-ம் ஆண்டுக்குள் 1.95 கோடி வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 7 கோடி பேருக்கு எரிவாயு இணைப்பு தரப்பட்டுள்ளது

மீன்வள மேம்பாட்டு அமைப்பு உருவாக்கப்படும்

நாட்டின் 97% கிராமங்களுக்கு சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

5 ஆண்டுகளில் 1.25 லட்சம் கி.மீ. நீளச் சாலைகள் மேம்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது

1.35 லட்சம் கி.மீ. சாலைகளை மேம்படுத்தும் திட்டத்துக்கு ரூ.80,250 கோடி செலவிடப்படும்

கிராம தொழில்களை மேற்கொள்ள 75,000 தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி தரப்படும்

மூங்கில், தேனீ வளர்ப்பு, காதித் தொழில்கள் மேம்பாட்டுக்காக 100 மையங்கள் உருவாக்கப்படும்

10,000 விவசாய உற்பத்தியாளர் மையங்கள் உருவாக்கப்படும்

2024-ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை

மத்திய – மாநில குடிநீர் திட்டங்களை ஒருங்கிணைத்து அனைவருக்கும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்

நாடு முழுவதும் 9.6 கோடி கழிப்பறைகள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்

ஒவ்வொரு கிராமத்திலும் திடக்கழிவு மேலாண்மை திட்டமும் தூய்மை இந்தியா திட்டத்தில் சேர்க்கப்படும்

எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புக்கு சிறப்புச் சலுகை வழங்கப்படும்

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க 3 ஆண்டுகளுக்கு ரூ 10 ஆயிரம் கோடி முதலீடு

அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும்

ரயில், பஸ் என எல்லாவற்றுக்கும் ஒரே அட்டை அறிமுகப்படுத்தப்படும்

அறிவியல் ஆராய்சிக்காக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்படும்

உயர் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த புதிய திட்டங்களை செயல்படுத்தப்படும்

உலகின் சிறந்த 200 தொழில்நுட்ப கல்வி நிலைய்களில் இந்தியாவின் 2 ஐ.ஐ.டி.க்கள், ஐ.ஐ.எஸ்.சி. இடம் பெற்றுள்ளது

முதலீடுகளுக்கான விண்ணப்பங்கள் மேலும் எளிமையாக்கப்படும்

பசுமை தொழில்நுட்பத்தின் மூலம் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி 33 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன

செளபாக்கியா யோஜனா, உஜூவாலா யோஜனா 2 திட்டங்களும் கிராமப்புறங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மின்வசதி உறுதி செய்யப்படும்

என்சைக்ளோபீடியா போன்று காந்தி பீடியா அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர்களிடம் காந்திய கொள்கைகள் கொண்டு சேர்க்கப்படும்

எல்.இ.டி. விளக்குகள் பயன்பாட்டின் மூலம் ஆண்டுதோறும் ரூ.18,341 கோடி குறைந்துள்ளது

மகளிர் மேம்பாட்டு திட்டங்களை வகுக்க அரசு மற்றும் தனியார் அடங்கிய அமைப்பு ஏற்படுத்தப்படும்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுக்கான வட்டி மானியம் நாடு முழுவதும் விரிவாக்கப்படும்

இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படும்

17 சுற்றுலா தலங்கள் உலக தரத்திலான சுற்றுலா தலங்களாக மேம்படுத்தப்படும்

பழங்குடிகள் பாரம்பரியத்தை பேணும் வகையில் புதிய காட்சியகம் அமைக்கப்படும்

கடந்த ஆண்டில் வாராக்கடன் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு குறைந்துள்ளது

நாட்டின் தொழில்கடன் விநியோகம் 13.8 சதவீதம் அதிகரித்துள்ளது
பொதுத்துறை வங்கிகளுக்கு மேலும் கூடுதல் மூலதனமாக ரூ.70,000 கோடி ஒதுக்கப்படும்

நாட்டின் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களில் ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும்

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டம் தொடரும்

புதிதாக 20, 10, 5, 2, 1 ரூபாய் நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும்

ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் இந்திய அரசின் அன்னியக்கடன் 5%க்கு குறைவாகவே உள்ளது

ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை

ரூ.400 கோடி வரை வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி விகிதம் 25 சதவீதமாக இருக்கும்.

மேலும் படிக்க