• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி +2 பொதுத்தேர்வை நேரடியாக எழுத முடியாது – பள்ளிக் கல்வித்துறை

August 21, 2018 தண்டோரா குழு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் நேரடியாக +2 பொதுத்தேர்வை எழுத முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.நேரடி தனித்தேர்வராக +2 தேர்வு எழுத இப்பருவம் முதல் விண்ணப்பிக்க இயலாது.இனிமேல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பிறகே 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியும் எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இதுவரை பள்ளி இறுதி பொதுத்தேர்வை எழுதித்தேர்ச்சி பெற்றவர்கள்,நேரடியாக பிளஸ் 2 தேர்வை,தனித்தேர்வராக எழுத இயலும் என்ற விதி இருந்தது.ஆனால்,தற்போது பிளஸ் 1 தேர்வும் அரசு பொதுத்தேர்வாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதனால்,10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது.அவர்கள் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர் தான்,பிளஸ் 2 தேர்வை எழுத முடியும் என கூறப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க