• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2௦ ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன உடல்கள் கண்டெடுப்பு

August 24, 2017 தண்டோரா குழு

இத்தாலி நாட்டில் உள்ள மிகப்பெரிய பனிமலை சிகரமான மொன்ட் பிளான்க்கில் சுமார் 2௦ ஆண்டுகளுக்கு முன், மலையேற சென்று காணாமல் போன 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்த மலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் மலையேற சென்றுள்ளார்.அப்போது அவர் மலை எரிக்கொண்டிருந்த பகுதியில் 3 பேருடைய உடல்கள் பனிக்குள் புதைந்திருப்பதை பார்த்துள்ளார். உடனே அந்த உடல்களை புகைப்படம் எடுத்து, மீட்பு சேவைக்கு தகவல் தந்துள்ளார். தகவல் அறிந்த அவர்கள் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்தனர். அந்த 3 பேரின் உடல்களை அங்கிருந்து மீட்டு, பிரேத சோதனைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 2௦ ஆண்டுகளாக அந்த உடல்கள் அங்கு புதைந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிரான்ஸ், செக் குடியரசு, தென் கொரியா மற்றும் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள், மொன்ட் பிளான்க் பகுதியில் மலையேற வருகிறார்கள். அப்படி வரும்போது, விபத்தில் சிக்கி உயிரழந்து விடுகின்றனர். கடந்த ஜூலை மாதத்தில், சுமார் 75 ஆண்டுகளுக்கு முன், காணாமல் போன சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த தம்பதினரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க