• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

18 பதக்கங்களை குவித்த கோவை மாணவர்கள்

January 6, 2023 தண்டோரா குழு

தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற தனிநபர் மற்றும் ஜோடிக்கான டாட் (TAT-Taekwondo Association Tamilnadu-Affiliated to India Taekwondo) 2-வது மாநில அளவிலான டேக்வாண் டோ போட்டியில், கோவை சம விளையாட்டு அகாடமி மாணவர்கள் 18 பதக்கங்களை வென்றனர்.

இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 800-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.4.5 வயது முதல் 17 வயது வரையிலான சம விளையாட்டு மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்று கோவை மற்றும் தமிழகத்திற்கு விருதுகளை குவித்து மாநிலத்தின் சார்பில் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

மாணவர்கள் 12 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த மாணவர்கள் கடந்த மாதம் பள்ளி பதாகைகளின் கீழ் ஆர்டிஎஸ் மற்றும் பிடிஎஸ் (RDS & BDS) மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கள் பள்ளிகளுக்கு பதக்கங்களை கொண்டு வந்தனர். இந்தப் போட்டிகளில் பங்கேற்க கடந்த ஒரு வருடமாக பயிற்சி பெற்று வந்தனர்.

பயிற்சியாளர்கள் பிரதீப் குமார், மதன் குமார் ஆகியோர் இவர்களுக்கு பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க