• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

16 வயது சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்திச் சென்ற இளைஞர் கைது

July 1, 2020 தண்டோரா குழு

16 வயது சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்திச் சென்ற இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி காணாமல் போனதாக கடந்த 28ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் காவல்துறையினர் காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன சிறுமியும் கோவை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷாத் என்ற இளைஞரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தது தெரியவந்தது. இது குறித்தான விசாரணையில் ஹர்ஷாத் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கோவையில் உள்ள தனது நண்பர் வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து ஹர்ஷதை கைது செய்த காவல்துறையினர் சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும் ஹர்ஷாத் மீது கடத்தல் மற்றும் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க