• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீடு புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிய நபர் கைது

October 25, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்டம் கோமங்கலம் பகுதியில் வசிக்கும் வேலுமணி (65) என்பவர் கடந்த 22.10.2024 அன்று தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவிலிருந்த சுமார் 5.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 20,000/-பணத்தை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றது தெரியவந்து,மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் கோமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *Dr.K.கார்த்திகேயன்,உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன்விசாரணை செய்து வந்த நிலையில்,நேற்று (24.10.2024) தனிப்படையினர் உடுமலைப்பேட்டை பகுதி சேர்ந்த சண்முகம் மகன் சரவணன்(39) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதன் பேரில் சரவணன்(39) என்பவரை கைது செய்து,மேற்படி வழக்கின் செத்துக்களான 5.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 20,000/-ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

மேலும் படிக்க