• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை மாவட்டம் 3ஆம் இடம்

May 30, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் முதல் முறையாக நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.2சதவிகிதத்துடன் கோவை மாவட்டம் 3ஆம் இடத்தை பெற்றுள்ளது.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

பொதுத்தேர்வை சந்தித்த 35ஆயிரத்து 85 பேரில் 33ஆயிரத்து 747 பேர் வெற்றிப்பெற்றுள்ளதாகவும், அதில்,மாணவர்கள் 94.21 சதவிகிதமும்,மாணவிகள் 97.74சதவிகிதமும் பெற்றுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள்,மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கண் பார்வை இழந்தவர்கள் 100 சதவிகித தேர்ச்சியும், காது மற்றும் வாய்ப்பேச முடியாதவர்கள் 90.91சதவிகிதமும்,உடல் ஊனமுற்றோர்கள் 95சதவிகிதமும், மற்ற பிவில் 85.71சதவிகிதமும் தேர்ச்சி விகிதம் உள்ளதாக தெரிவித்தனர்.

தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 99.51சதவிகித தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள நிலையில்,அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 89.93 சதவிகிதமாகவும்,மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 88.59ஆக குறைவாக உள்ளது.மேலும்,3ஆம் பாடப்பிரிவான கலைப்பிரிவில் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ளதால்,அந்த பாட பிரிவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும்,மாணவர்கள் அதிகமாக அந்த பாடப்பிரிவில் சேர்க்கை உள்ளதால் இந்த நிலை உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க