• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு சம உரிமை வழங்கக்கோரி நீதிமன்றத்தில் கோஷமிட்ட மாவோயிஸ்ட்கள்

October 22, 2018 தண்டோரா குழு

கோவை அருகே கருமத்தம்பட்டியில் கடந்த 2015ம் ஆண்டு மாவோயிஸ்ட் தலைவர் ரூபேஸ்,அவரது மனைவி சைனா மற்றும் மாவோயிஸ்ட்கள் கண்ணன்,அனூப், வீரமணி ஆகிய 5 பேரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ரூபேஸ் மீது கேரளாவில் பல வழக்குகள் உள்ளதால்,திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டார்.சைய்னாவிற்கு சில மாதங்களுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.இந்த வழக்கு விசாரணை கோவை 3வது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நடந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 13ம் தேதி மீண்டும் தமிழக மற்றும் கேரளா காவல் துறைக்கு ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டதை அடுத்தும்,பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முடியாமல் திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மாவோயிஸ்ட்கள் அனூப்,கண்ணன்,வீரமணி ஆகியோர் கோவில் நுழைய பெண்களுக்கு சம உரிமைக்காக போராடுவோம்,போராடுவோம் என கோஷமிட்டு சென்றனர்.

மேலும் படிக்க