October 20, 2018
தண்டோரா குழு
கோவை,திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களில் டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.பலர் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் பகுதியை சேர்ந்த 69 வயது முதியவருக்கு கடந்த சில நாடகளாக தொடர் காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது.இதனைதொடர்ந்து கோவை அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார்.பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.இதேபோல் ஈரோட்டை சேர்ந்த 6 வயது சிறுமிக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.இவர்கள் இருவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மருத்துவர்கள் தொடர்ந்து இவர்களின் உடல்நிலையை குறித்து கண்காணித்து வருகின்றனர்.