• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கோவையில் ஆர்ப்பாட்டம்

March 1, 2017 தண்டோரா குழு

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் நீதிமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒன்றுதிரண்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். அதில் வெற்றியும் கண்டனர். இளைஞர்களின் அறப் போராட்டத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்தன.

தற்போது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நெடுவாசல் பகுதியில் ஆயிரக்கணக்கில் பொதுமக்களும் இளைஞர்களும் இணைந்து 14 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இளைஞர்களின் இந்தப் போராட்டம் மற்ற மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது.

இதன் ஒருபகுதியாக, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு புதனன்று காலையில் திரண்ட இளைஞர்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும், “மாட்டுக்காக வந்த நாங்கள், தமிழகத்தின் மண்ணை காக்கவும் வருவோம்” என்றும் கோஷம் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க