• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹிட்லர் வாழ்க என கோஷமிட்ட சீனர்கள் கைது

August 7, 2017 தண்டோரா குழு

ஜெர்மன் நாட்டு பாராளுமன்றம் முன் ‘ஹிட்லர் வாழ்க’ என்று கோஷமிட்ட இரண்டு சீன சுற்றுலா பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெர்மன் நாட்டை சுற்றிப்பார்க்க வந்த இரண்டு சீன சுற்றுலா பயணிகள், ஜெர்மன் பாராளுமன்ற மன்றத்திற்கு முன் நின்றுகொண்டு, ஹிட்லரின் படையான ‘நாசி யுக’ போர் வீரர்கள் போல் போஸ்களை கொடுத்து கைபேசி மூலம் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். மேலும் ‘ஹிட்லர் வாழ்க’ என கோஷமிட்டனர்.

அவர்களை ஜெர்மன் நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் 500 யூரோ அபராதம் விதிக்கப்பட்டு, அதன் பின் ஜாமீன் வழங்கப்பட்டது.

1933-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை அடால்ப் ஹிட்லர் ஜெர்மனி நாட்டை ஆட்சி செய்து வந்தார். அவருடைய ஆட்சி காலத்தில் நாசி ராணுவத்தினர் ‘ஹிட்லர் வாழ்க’ என்று சொல்லும் முறையை பின்பற்றி வந்தனர். ஆனால், அந்த முறை வெறுப்பின் அடையாளமாக இருந்தது. அவருடைய இறப்பிற்கு பிறகு அந்த முறை தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க