• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு டிஎஸ்பி பதவி பஞ்சாப் அரசு

July 24, 2017 தண்டோரா குழு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீரர் ஹர்மன்பரீத் கவூருக்கு டிஎஸ்பி பதவி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போடியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் 115 பந்துகளில் 171 ரன்கள் எடுத்தார்.இவருக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது. மேலும், இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்மன்பரீத் கவூரை, பஞ்சாப் மாநில முதலைமைச்சர் பாராட்டி அவருக்கு 5 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுதவிர ஹர்மன்ப்ரீத் பஞ்சாப் காவல்துறையில் சேர விரும்பினால், அவருக்கு டிஎஸ்பி பதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்

மேலும் படிக்க