• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் சீண்டல் – மாணவர்கள் போராட்டம்

February 13, 2019 தண்டோரா குழு

கோவை க.க.சாவடி ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் சீண்டல் செய்ததாக கூறி மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை க.க.சாவடி ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். குறிப்பாக கேரளாவை சேர்ந்த மாணவர்கள் அதிகமாக படிக்கின்றார்கள். இந்நிலையில் அந்த கல்லூரியில் உதவி பேராசிரியராக மணிகண்டன் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் துறை சார்ந்த வகுப்புகள் எடுக்கும் போது மாணவிகளை பாலியல் சீண்டல் செய்வதாக கூறி மாணவ, மாணவியர்கள். உள்ளிருக்கும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மேலும், செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிக்கையாளர்களை கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்க மறுக்கின்றார்கள். நாம் அங்கு படிக்கும் சில மாணவர்களிடம் விசாரித்ததில் இதுபோல் அடிக்கடி நடப்பதாகவும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களை அழைத்து சமரசம் செய்வதும் வாடிக்கையாக உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தார்கள்.

மேலும் படிக்க