February 13, 2019
தண்டோரா குழு
கோவை க.க.சாவடி ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் சீண்டல் செய்ததாக கூறி மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை க.க.சாவடி ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். குறிப்பாக கேரளாவை சேர்ந்த மாணவர்கள் அதிகமாக படிக்கின்றார்கள். இந்நிலையில் அந்த கல்லூரியில் உதவி பேராசிரியராக மணிகண்டன் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் துறை சார்ந்த வகுப்புகள் எடுக்கும் போது மாணவிகளை பாலியல் சீண்டல் செய்வதாக கூறி மாணவ, மாணவியர்கள். உள்ளிருக்கும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மேலும், செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிக்கையாளர்களை கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்க மறுக்கின்றார்கள். நாம் அங்கு படிக்கும் சில மாணவர்களிடம் விசாரித்ததில் இதுபோல் அடிக்கடி நடப்பதாகவும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களை அழைத்து சமரசம் செய்வதும் வாடிக்கையாக உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தார்கள்.