• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ நகர் மற்றும் சிவராம் நகர் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றாதாதால் நோய் தொற்று பரவும் அபாயம்

October 28, 2021 தண்டோரா குழு

கோவை சுங்கம் பைபாஸ் ஸ்ரீ நகர் மற்றும் சிவராம் நகர் குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றாதாதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சி 74 வது வார்டுக்கு உட்பட்ட சுங்கம் பைபாஸ் சாலை,ஸ்ரீ நகர்,சிவராம் நகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு போதிய அடிப்படை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், துப்புரவு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால், ஆங்காங்கே சாலையில் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது.

இதனால், இப்பகுதி மக்கள் சுகாதார கேட்டில் தவித்து வருகின்றனர். குப்பைகள் தேங்கியுள்ளதால், அந்த வழியாக மக்கள் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் சரிவர குப்பை அகற்றப்படாததால், அங்கு விஷ பூச்சிகள்,பாம்புகள் போன்றவற்றின் கூடாரமாக மாறி வருவதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து பல முறை மாநாகராட்சி அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை எனவும் புகார் நெரிவித்தள்ளனர்.

மேலும் படிக்க