• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை கல்லூரியில் ஐந்தாம் பட்டமளிப்பு விழா

December 3, 2023 தண்டோரா குழு

கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஐந்தாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவிற்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஆதித்யா, தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கே.சுந்தரராமன், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் செ.பழனியம்மாள் முன்னிலை வகித்தார்கள்.

இவ்விழாவிற்கு ராஜேந்திரன் தண்டபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். தம் உரையில், மாணவர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.உலகில் காலடி எடுத்து வைக்கும் போது அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு இருப்பதை நினைவூட்டினார்.

ஆபத்துக்களை எடுக்கவும், அவர்களின் கனவுகளைப் பின்தொடரவும் பயப்பட வேண்டாம் என்று மாணவர்களை ஊக்குவித்த அவர்,உலகம் முழுவதுமாக வாய்ப்புகள் நிறைந்திருப்பதாக அவர்களுக்கு உறுதியளித்தார்.

இவ்விழாவில் 02 தங்கப் பதக்கங்கள், 31 பல்கலைக்கழகத் தரவரிசைகள், 9 முனைவர் பட்டம் உட்பட 940 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீமதி மலர்விழி பட்டங்கள் பெற்ற மாணவர்கள் அனைவரும் சிறந்த எதிர்காலத்தோடு நாட்டின் பொறுப்புள்ள குடிமகன்களாக இருக்க வேண்டும். எங்கள் புகழ்பெற்ற நிறுவனத்தில் படிப்பின் போது மாணவர்களை தொழில் வல்லுநர்களாக வடிவமைக்கப் பங்காற்றிய ஆசிரிய உறுப்பினர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பெற்றோர்கள் மகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்தார்.

மேலும் படிக்க