• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ அகில பாரத ஐயப்பசேவா சங்கம் சாய்பாபாகாலனி கிளை முதலாம் ஆண்டு துவக்க விழா

December 19, 2022 தண்டோரா குழு

ஸ்ரீ அகில பாரத ஐயப்பசேவா சங்கம் சாய்பாபாகாலனி கிளை முதலாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மகா அன்னதானம் நடைபெற்றது.

ஸ்ரீ அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சாய்பாபாகாலனி கிளை துவங்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் முதலாம் ஆண்டு மகா அன்னதான நிகழ்ச்சி சாய்பாபாகாலனியில் உள்ள நாகசாய் மந்திர்,சாய்தீப் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முதலாம் ஆண்டு துவக்க விழாவில் முன்னதாக மகா கணபதி ஹோமம்,சுவாமி ஐயப்பன் பஜனையுடன்,சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மகா அன்னதானத்தை சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ச்சுனன் துவக்கி வைத்தார்.

அன்னதான விழாவிற்கான ஏற்பாடுகளை அகில பாரத ஐயப்பா சேவா சங்க சாய்பாபாகாலனி கிளை நிர்வாகிகள் சேகர்,கருணாகரன், குமரன்,மற்றும் மதுரை மகாலிங்கம், ரமேஷ், பழனிசாமி,மாதவன் உட்பட பலர் செய்திருந்தனர். மகா அன்னதான பெருவிழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க